குஜராத் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா!

05 June 2020 அரசியல்
rahulgandhicongress.jpg

குஜராத் மாநிலத்தினைச் சேர்ந்த இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தங்களுடையப் பதவியினை ராஜினாமா செய்துள்ளனர்.

குஜராத் பல ஆண்டுகளாக பாஜ கட்சியே ஆட்சியில் உள்ளது. இந்தக் கட்சிக்கு அந்த மாநிலத்தில் தனிப்பெரும் செல்வாக்கு உள்ளது. அதனை எதிர்க்கும் இடத்தில், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியானது இருந்து வருகின்றது. வருகின்ற மாநிலங்களவைத் தேர்தலுக்காக, நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது இரண்டு இடங்களில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த கட்சியின் எம்எல்ஏக்கள் அக்சய் படேல் மற்றும் ஜிட்டூபாய் சௌத்ரி ஆகியோர் தங்களுடைய எம்எல்ஏ பதவியினை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள் கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது. தொடர்ந்து, பாஜக ஆளும் மாநிலங்களில், காங்கிரஸ் கட்சியினர் தங்கள் பதவியினை ராஜினாமா செய்வதும் பின்னர், பாஜகவில் இணைவதும் வாடிக்கையாக உள்ளது.

HOT NEWS