ஆப்கானிஸ்தான் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ள தகவல் தற்பொழுது, அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் இரண்டு விமானிகளும், மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆரியானா விமான நிறுவனத்தினைச் சேர்ந்த விமானம், போகும் வழியில், இந்த விமானத்துடன் இருந்து தகவல் தொடர்பானது துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, இந்த விமானம் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள தே யாக் பகுதியில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவானில் தீப்பிடித்து எரிந்து விழுந்து இருக்கலாம் என சந்தேகப்படப்பட்டது. இதனால், அந்த விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதாக, அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இருப்பினும், இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களைப் பற்றியத் தகவல்கள் தெளிவாக வெளியாகவில்லை. அதே சமயம், இந்த விமானம் தங்களுடையது அல்ல எனவும், எங்கள் விமானங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு பாதுகாப்பாக சென்றுவிட்டன எனவும், ஆரியன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் இறந்திருக்கலாம் எனவும், இதனை இயக்கிய விமானிகளும் இறந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. இதனால், தற்பொழுது மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, மீட்புக் குழுவினர் சம்ப இடத்திற்கு விரைந்துள்ளனர்.