இந்தியாவிற்கு 7 டன் மருந்து பொருட்கள்! அரபு அரசு அனுப்பியது!

03 May 2020 அரசியல்
uaeindia.jpg

இந்தியாவிற்கு கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட, ஏழு டன் மருத்துவப் பொருட்களை, ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பி வைத்துள்ளது.

இந்தியாவில் தற்பொழுது கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், 1000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இதனால், மேலும் இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்காக, வருகின்ற மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது, நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக, ஐக்கிய அரபு அமீரகம், இந்தியாவிற்கு விமானத்தின் மூலம், 7 ஆயிரம் கிலோ மருத்துவப் பொருட்களை அனுப்பியுள்ளது. இது குறித்து அதன் அறிக்கையில், இந்தியாவிற்கும் எங்களுக்கும் நீண்ட காலமாக, நல்ல உறவு நிலையும், சகோதரத்துவமும் உள்ளது. அதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தினை வலுப்படுத்தவும் இந்த மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளது.

HOT NEWS