இன்று சைதாப்பேட்டையில், திமுக இளைஞரணித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தினார்.
அவருடன் சுமார், 500க்கும் மேற்பட்ட திமுக இளைஞரணி உறுப்பினர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் வைத்திருந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை வைத்து போராட்டம் நடத்திய அவர்கள், ஆளும் மத்திய மற்றும் மாநில அரசினைக் கண்டித்து கண்டனங்களை எழுப்பினர். பின்னர், கையில் வைத்திருந்த நகலைக் கிழித்து எரிந்தனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி மற்றும் அவர் அணியினைச் சேர்ந்தவர்கள், சென்னை அண்ணாசாலையில் அமர்ந்து வழிமறிக்கச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தியப் போலீசார் கைது செய்தனர்.