பஞ்சமி நில விவகாரம்! விளக்கமளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்

17 November 2019 அரசியல்
udhayanidhistalin.jpg

அசுரன் படத்தினை சட்டமன்ற இடைத்தேர்தலின் பொழுது, தூத்துக்குடியில் உள்ள திரையறங்கில் பார்த்து ரசித்த திமுக தலைவர் முக ஸ்டாலின், அதற்குப் பாராட்டுத் தெரிவித்து டிவீட் செய்தார்.

அப்பொழுது, முரசொலி நிர்வாகக் கட்டிடம் பஞ்சமி நிலத்தில் தான் அமைந்துள்ளது எனவும், அதனை மீட்க வேண்டும் எனவும் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் பதிலுக்கு ஒரு டிவீட் செய்தார். இதனையடுத்து, பாஜகவினரும் இது குறித்து அடுக்கடுக்காக தங்களுடையப் புகார்களைத் தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன், இது குறித்து தாழ்த்தப்பட்டோர் நல வாரியத்தில் புகார் அளித்தார் இதனையடுத்து, தமிழக தலைமை செயலருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், விளக்கமளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து, வரும் நவம்பர் 19ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில், நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என, முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

HOT NEWS