இரானில் இருந்து 180 பேருடன் கிளம்பிய விமானம், நடுவானில் விபத்துக்குள்ளாகி உள்ளதாக, ஃபார்ஸ் அரசு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இரானில் உள்ள டெஹ்ரானின் காமெனி விமானநிலையத்தில் இருந்து கிளம்பி, உக்ரைன் தலைநகர் கீவ் விமானநிலையத்திற்கு இந்த விமானம் புறப்பட்டது. புறப்பட்ட உடனேயே, போயிங் 737 விமானம் இரானில் விழுந்து நொறுங்கியுள்ளது என, ஈரான் நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், அதில் பயணம் செய்த 180 பேரின் நிலைமையை பற்றி தெளிவானத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.