மோடி விழுந்த படிக்கட்டு இடிக்கப்பட உள்ளது! உத்திரப் பிரதேச அரசு அதிரடி!

18 December 2019 அரசியல்
modislippeddown.jpg

கடந்த வாரம், கங்கா திட்டத்திற்காக உத்திரப்பிரதேச மாநிலம் சென்றிருந்த மோடி, அங்கிருந்த படிக்கட்டுகளில் ஏறும் பொழுது, நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இதுபெரும் பேசுபொருளானது. கங்கை நதியில் படகில் பயணம் செய்த மோடி மற்றும் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், மீண்டும் பயணத்தினை முடித்துக் கொண்டு, கரைக்குத் திரும்பினர். படிகளில் ஏறும் பொழுது ஒரு படி மட்டும் சற்று உயரமாக இருந்ததால், அந்தப் படியில் ஏறும் பொழுது கீழே விழுந்தார் பிரதமர்.

இதனையடுத்து, அந்தப் படியானது இடிக்கப்பட்டு விரைவில் மற்றப் படிகளின் உயரத்தை ஒத்த படியானது கட்டப்படும் என, அப்பகுதி ஆணையர் சுதிர் எம்.போப்ட் தெரிவித்துள்ளார்.

HOT NEWS