பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை! அமெரிக்கா அதிரடி!

10 July 2020 அரசியல்
donaldtrumpiran.jpg

பாகிஸ்தானில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் விமானங்களுக்கு, அமெரிக்க அரசு அதிரடித் தடையினை விதித்துள்ளது.

கடந்த மாதம், பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் ஏற்பட்ட விமான விபத்தில், சுமார் 97 பேர் பரிதாபமாகப் பலியாகினர். இதற்குப் பிறகு, பாகிஸ்தானிடம் இருந்து அமெரிக்காவிற்கு ஒரு கோரிக்கை வந்தது. அதன்படி, அமெரிக்காவில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தானியர்களை மீட்க விமானங்களை அனுப்ப உள்ளதாக தெரிவித்தது. முதலில் அதற்கு அனுமதி அளித்த அமெரிக்கா, பின்னர் அதற்குத் தடை விதித்தது.

பாகிஸ்தான் விமானிகளில், மூன்றில் ஒரு பங்கு நபர்களுக்கு, போதியப் படிப்பறிவு இல்லாதவர்கள் எனத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் விமானங்கள் அமெரிக்கா மீது பறக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அமெரிக்க விமானத்துறை அளித்த ஆய்வின் அடிப்படையில், அமெரிக்க அரசு இந்த செயலில் ஈடுபட்டு உள்ளது. ஏற்கனவே, ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் பாகிஸ்தான் நாட்டு விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS