தடுப்பூசி விரைவில்! அமெரிக்கா நம்பிக்கை! மருத்துவர்கள் மகிழ்ச்சி!

10 June 2020 அரசியல்
coronavirus.jpg

விரைவில், கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்து தயாராகிவிடும் என, அமெரிக்கா அறிவித்துள்ளது.

படோடெக்னாலஜி கண்டுபிடிப்பு அமைப்பின் சார்பில், நேற்று புதிய விவாதக் கூட்டம் நடைபெற்றது. அதில், விஞ்ஞானியும், மருத்துவருமான உலகப் புகழ்பெற்ற அந்தோணி பாசி கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், இந்த வைரஸ் தொற்றானது தற்பொழுது மிகக் குறைந்தக் காலக்கட்டத்தில், பயங்கரமான பேரழிவினை ஏற்படுத்தி விட்டது. இந்த வைரஸ் காரணமாக, பல லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இது என் வாழ்க்கையின் மிகமோசமானக் கனவு போல உள்ளது என்றுக் கூறினார்.

பின்னர், இந்த வைரஸிற்கு விரைவில் நாம் மருந்து தயார் செய்துவிடுவோம். அதற்கான முயற்சிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. அதிவிரைவில், தடுப்பூசி மருந்து உருவாகிவிடும் எனவும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

HOT NEWS