உத்திரகாண்டில் காட்டுத் தீ! நான்கு நாட்களாக எரிகின்ற அவலம்!

27 May 2020 அரசியல்
uttarakhanfire.jpg

கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக, உத்திரகாண்ட் மாநிலத்தில் காட்டு தீயானது வேகமாகப் பரவி வருகின்றது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனாவைரஸ் மட்டுமல்ல, காட்டுத்தீயும் வேகமாகப் பரவி வருகின்றது. கடந்த நான்கு நாட்களாக, அம்மாநிலத்தின் பலப் பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. மொத்தும் 46 காட்டுத் தீ விபத்தானது ஏற்பட்டு உள்ளது. இதனால், 51.34 ஹெக்டேர் விளைநிலங்கள் கடும் சேதத்தினை சந்தித்துள்ளன.

இந்த தீ விபத்தின் காரணமாக, மொத்தம் 1.32 லட்சம் மதிப்புள்ள பயிர்கள் நாசமாகி உள்ளன. இந்த தீ விபத்தின் காரணமாக, இருவர் உயிரிழந்து உள்ளனர். ஒரு பலத்தக் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விஷயத்தினை தீவிரமாக கண்காணிக்கும், உத்திரகாண்ட் அரசானது, தற்பொழுது தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

HOT NEWS