உத்திரப் பிரதேசத்தில் தற்பொழுது கனமழை பெய்து வருகின்றது. கடந்த வெள்ளிக் கிழமை முதல் தொடர்ந்து விடாமல், மழை பெய்து வருகின்றது. இதனால், அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கனமழையின் காரணமாக, பல பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த மழையின் காரணமாக ஏற்பட்ட, விபத்துக்களின் மூலமாகவும் கிட்டத்தட்ட 47 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதனையொட்டி, மழையின் சேத அளவைப் பார்த்து வரும், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா, 4 லட்ச ரூபாயை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த மழை வரும் புதன் கிழமை வரை நீடிக்கும் எனவும், பின் படிப்படியாகக் குறையும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.