ஒரு மாத மின் கட்டணத்தினை தள்ளுபடி செய்க! வைகோ வேண்டுகோள்!

14 April 2020 அரசியல்
vaiko.jpg

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மாத மின் கட்டணத்தினைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஏழைய, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கையானது மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது. செலவிற்குப் பணமில்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

சிறு குறு தொழில் செய்பவர்கள் மற்றும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளது. எனவே, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் என, அனைத்திற்கும் எவ்விதப் பாரபட்சமுமின்றி, ஒரு மாத மின்கட்டணத்தினைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HOT NEWS