pic credit:twitter.com/ani
உலகப் புகழ் பெற்ற வாரணாசியில், பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றிப் பெற்றார். இதனைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியானது, நட்சத்திர அந்தஸ்தை அடைந்தது.
இந்நிலையில், அங்குள்ள பாஜக ஆதரவாளரகள், பிரதமர் மோடியின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அங்குள்ள பலரும் கோவில்களுக்குச் சென்று, பிரதமர் மோடியின் உடல்நலம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக, பூஜைகள் செய்து வருகின்றனர்.
இதனிடையே, அங்குள்ள பாஜக தொண்டர், அங்கிருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில், இந்தத் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் எனவும், அவர் வெற்றிப் பெற்று, மீண்டும் நாடாள வேண்டும் எனவும், வேண்டியிருந்தாராம். அவருடைய வேண்டுதல் நிறைவேறியதால், அங்குள்ள ஆஞ்சநேயருக்கு 1.25 கிலோவால் ஆன தங்க கிரீடத்தை வேண்டியதன், நேர்த்திக் கடனாக செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை பிரதமர் மோடி, கடந்த 5 ஆண்டுகளில் செய்துள்ளார். அவருடைய தீவிர ரசிகன் நான். அவர் வெற்றிப் பெற்றால், நாடு நன்றாக இருக்கும் என்பதால், இதனை நான் செய்தேன் எனக் கூறியுள்ளார்.
Varanasi:Arvind Singh,a fan of PM Modi offered a gold crown to Lord Hanuman at Sankat Mochan Temple yesterday,ahead of PM's birthday,says,"Ahead of Lok Sabha polls, I took a vow to offer gold crown weighing 1.25 kg to Lord Hanuman if Modi ji formed govt for the second time"(16/9) pic.twitter.com/G6ephry6nC
— ANI UP (@ANINewsUP) September 17, 2019
www.hindustantimes.com/india-news/on-pm-narendra-modi-s-69th-birthday-varanasi-man-offers-1-25-kg-gold-crown-at-sankat-mochan-temple/story-czyqTnVzEGJvTYW61eC86I.html