நடிகர் விஜய்க்கு அவருடைய தாய் ஷோபனா அன்புக் கடிதம்!

29 August 2019 சினிமா
vijaymother.jpg

கொஞ்ச நாளாக, அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் இல்லாமல் இருந்தது. நேற்று, நடிகர் விஜய் அவர்களின் தாய், விஜய்க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவ்வளவு தான், மீண்டும் புகைய ஆரம்பித்துவிட்டது சூப்பர் ஸ்டாருக்கானப் போட்டி.

நேற்று அவர் நடிகர் விஜய்க்காக கடிதம் எழுதியிருந்தார். அதில் ஈன்றெடுக்கும் சிசு, ஒரு செவிலியரின் உள்ளங்கையில் தவழ்ந்து பின் தாயின் உள்ளம் நோக்கி வரும். அவளும் உச்சிமுகர்வாள். ஆனால், நான் பெற்ற பிள்ளை இன்று கோடான கோடி தாய்மார்கள், ரசிகர்கள் உள்ளங்களில் தவழ்ந்து கொண்டிருப்பதையும், அவர்களும் அதை தளபதியாய் கொண்டாடி கொண்டிருப்பதையும் காண்கையில், என் இமை ஓரம் சிறு ஈரம் கசிந்து வழிகிறது. அதை மீறி வேறென்ன நான் எழுத்தில் வடிக்க, விஜய் உன்னைப் பற்றி.

நீ என் கரம் பற்றி நடந்ததை, பின் நடந்ததை, எல்லாம் (ஏற்றம், இறக்கம், தோற்றல், போற்றல்) அசைப்போட்டு பார்க்கையில், என் எண்ணங்களின் உச்சிக் குளிர்ந்து என் அகம் எங்கும் வடிகிறதே, அந்த நுண்ணிய உணர்வுகளை எந்த காகிதத்தில் வடிப்பது.

அமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல், ஆர்ப்பரிக்கும் இளம்வயதில் கூட நீ அமைதியின் அவதாரமாய் இருக்கையில், இயங்குகையில் என் ஆழ்மன ஊற்று பெருகி ஆனந்தம் வடிகையில், அதை எந்தப் பேனாவுக்குள் மையாய் ஊற்றி எழுத முடியும்.

நீ உன் அழுகையை நிறுத்தி, முதன் முதல் உன் பூவிதழ் விரித்து, புன்னகைத்தது முதல், இன்று உன் இதயத்தளவு ரசிகர்களின் பெருவெள்ளத்திற்கு இடையே, இன்பத் தத்தளிப்பில் நீ புரியும் புன்னகையை விவரிக்க. தேடி கிடைக்காமல், வார்த்தைகளை கடன் வாங்கும் (கோடி கோடியாய் பொருள் இருந்தும்) நிலையை, ஒரு சிறப்பிதழுக்குள் என்னால் எப்படி எழுதி விட முடியும்?

சுருங்கக் கூறின் திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர், திரு. எம்.ஜி.ராமச்சந்திரன், திரு. ரஜினிகாந்த் வரிசையில், அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில், தாய் என்பதெல்லாம் மறந்து, ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில். என்று நடிகர் விஜயின் தாய் திருமதி. ஷோபா சந்திரசேகர் கடிதம் எழுதியுள்ளார்.

HOT NEWS