விக்ரவாண்டி திமுக வேட்பாளர் அறிவிப்பு! முக ஸ்டாலின் அறிவித்தார்!

24 September 2019 அரசியல்
mkstalinlatest1.jpg

தமிழகத்தில் வரும் அக்டோபர் 21ம் தேதி நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு, சட்டமன்றத் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தமிழக தேர்தல் ஆணையத் தலைவர், அரோரா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்தக் கட்சிகள், கட்சி உறுப்பினர்களிடம் நேர்காணல் செய்து வருகின்றனர். திமுக சார்பில், இன்று காலை நேர்காணல் நடைபெற்று முடிந்தது. நேர்காணல் முடிந்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர், திரு.மு.க. ஸ்டாலின், நடைபெற உள்ள, சட்டமன்ற இடைத்தேர்தலில், விக்ரவாண்டித் தொகுதியில், திமுக சார்பில் புகழேந்திப் போட்டியிடுவார் என அறிவித்தார். மேலும், நாங்குநேரித் தொகுதியில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் போட்டியிடுவார் எனவும் அறிவித்தார்.

விக்ரவாண்டியில் போட்டியிடும் புகழேந்தி 65 வயதானவர். அவர், திமுக கட்சியின் பல பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS