விசாகப்பட்டினத்தில் மருந்து தொழிற்சாலையில் தீ விபத்து! 15 முறை வெடித்தது!

14 July 2020 அரசியல்
vishakapatinamfire.jpg

விசாகப்பட்டினத்தில் உள்ள மருந்து தொழிற்சாலை தீ பிடித்ததில், 5 பேர் காயம் அடைந்தனர்.

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 2143 ஏக்கரில், பல மருந்துத் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவத் தொழில் நகரில் இருக்கும், விசாகா சால்வெண்ட்ஸ் என்ற தொழில்சாலையில் நள்ளிரவு, திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தின் காரணமாக, அந்தத் தொழிற்சாலையில் இருந்து பொருட்கள் தொடர்ந்து 15 முறை வெடித்துச் சிதறின. இதனால், கடுமையான கரும்புகையானது தொழிற்சாலையினை சுற்றிச் சூழ்ந்திருந்தது. சுமார் 15 கிலோமீட்டர் அளவிற்கு, இந்தப் புகையானது பரவியது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், வேகமாகத் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில், 5 பேர் லேசான காயம் அடைந்துள்ளனர் எனவும், ஒருவர் தீக்காயம் அடைந்துள்ளார் எனவும் கூறியுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தொடர்ந்து தீயணைக்கும் பணியானது நடைபெற்றது. ஒரு வழியாகத் தற்பொழுது, கரும்புகையும், தீயும் கட்டுக்குள் வந்தது.

HOT NEWS