ஒரு மாதக் குழந்தையுடன் பணிக்குத் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி!

13 April 2020 அரசியல்
srijanagummalla.jpg

குழந்தைப் பிறந்து ஒரு மாதமே ஆன நிலையில், தன்னுடைய பணிக்குத் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரியினை, இந்தியா முழுவதும் பாராட்டி வருகின்றது.

கேரளாவின் விசாகப்பட்டினம் பகுதியின் முனிசிபாலிட்டியின் தலைமை அலுவலராகப் பணிபுரிபவர் ஸ்ரீஜனா கும்மாலா. இவர் கடந்த மாதம், அழகியக் குழந்தைக்குத் தாயானார். இந்நிலையில், தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக, கேரள மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையானது கேள்விக்குறியாகி உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீஜனா, தற்பொழுது பணிக்குத் திரும்பியுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக, தேர்வில் வெற்றிப் பெற்ற ஜனா தற்பொழுது கேரளாவில் பணியாற்றி வருகின்றார். இவர் தன்னுடையக் குழந்தையுடன், அலுவலகத்திற்கு வருகின்றார்.

இது குறித்துப் பேசுகையில், இது எனக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சமயம் ஆகும். மனித குலம் கஷ்டப்படும் போது, அதிகாரியாக நான் என்னுடையக் கடமையைச் செய்ய வேண்டியுள்ளது எனக் கூறியுள்ளார். மகப்பேற்றிற்காக, ஆறு மாத விடுமுறையும் முழு சம்பளத்தினையும் மத்திய அரசு வழங்கி வருகின்ற நிலையில், இவருடைய அர்ப்பணிப்பினைக் கண்டு, சமூக ஆர்வலர்கள் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நாமும் வாழ்த்தலாமே!

HOT NEWS