உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக் காண்பதற்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன், சீன அதிபர் ஜீ ஜின்பிங், தமிழகத்திற்கு வருகைத் தந்திருந்தார். அவரை மாமல்லபுரத்தில் சந்தித்த மோடி, தமிழக பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சட்டையில் வந்து அசத்தினார். இந்நிலையில், தற்பொழுது, ஜனவரி மாதம் பொங்கலன்று நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்வையிடுவதற்காக, ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதனை அவர் ஏற்றுக் கொண்டதாகவும், தகவல்கள் பரவி வருகின்றன.
இதனால், அவர் வரும் ஜனவரி மாதம், மதுரைக்கு வர உள்ளார் எனவும், அவருடன் பாரதப் பிரதமர் மோடியும் ஜல்லிக்கட்டுப் போட்டியினைப் பார்க்க உள்ளார் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வத் தகவல் இன்னும் வெளியாக வில்லை.