பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையில், வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில், போர் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக, பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி நேற்றுப் பேட்டியளித்த ரஷீத், காஷ்மீர் விவகாரத்தில் முடிவு எடுக்கும் உரிமை, காஷ்மீர் மக்களுக்கே உண்டு. அதில் ஐநா சபை தலையிடக் கூடாது. ஹிட்லர் மோடியின் காரணமாக, காஷ்மீருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை நீடித்தால், பாகிஸ்தானிற்கும் இந்தியாவிற்கும் இடையில், வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில், போர் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. எங்களுக்கு சீனாவின் ஆதரவு உள்ளது பலமாக உள்ளது.
Source:https://www.ndtv.com/india-news/full-fledged-war-between-india-and-pak-in-october-or-november-pak-minister-2091998