pic credit:twitter.com/imrankhan
திங்களன்று பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளிடமுமே, அணு குண்டுகளும், அணு ஆயுதங்களும் உள்ளன. அவைகளைப் பயன்படுத்தினால், மிக மோசமான விளைவுகளே கிடைக்கும்.
இந்தியா உடனானப் பிரச்சனையில், பாகிஸ்தான் ஒரு போதும் போரினைத் துவங்காது. போர் எப்பொழுதும் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு ஆகாது. போரில் வெல்பவனும் தோல்வி அடைந்தவன் தான். போர் எப்பொழுதும், மற்றொரு பிரச்சனையையே உருவாக்கும் எனவும் கூறியுள்ளார்.
2003ம் ஆண்டு ஜனவரி மாதம், இந்தியா எடுத்துக் கொண்ட சபதத்தின் படி, முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தாது. அதே சமயம், மற்ற ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம் என கூறவில்லை.