ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கு அப்படி என்ன மவுசு? விவரிக்கிறது இந்த கட்டுரை!

09 April 2020 அரசியல்
hcqs200tablet.jpg

உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகின்றது கொரோனா வைரஸ். இந்த வைரஸால் 15 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் உலகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமாகியும் உள்ளனர். 90,000 பேர் இந்த நோயால் மரணமடைந்து உள்ளனர்.

சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த இந்த வைரஸிற்கு, தற்பொழுது வரை குணப்படுத்தும் மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக, உலக நாடுகள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றால் ஏற்படும் நிமோனியா காய்ச்சலுக்கு, பல மருந்துகளை உலக நாடுகள் பரிந்துரைக்கின்றன. இருப்பினும், ஹெஐவி, ஹெச்ஒன்என்ஒன் போன்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மருந்தினையே, பெரும்பாலான நாடுகள் பயன்படுத்துகின்றன.

இருப்பினும் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் தற்பொழுது இந்தியாவினை நாடியுள்ளன. இது உலக வரலாற்றில், கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின். இந்த மருந்தானது, மலேரியாத் தொற்றிற்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த மருந்தினைப் பயன்படுத்துவதன் மூலம், கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களை காப்பாற்ற இயலும்.

இப்கா ரிசர்ச் நிறுவனம் தான், அதிகளவில் இந்தியாவில் இந்த மருந்தினை உற்பத்தி செய்கின்றது. இதற்கு காப்பீட்டு உரிமமும் இந்தியாவிடம் தான் உள்ளது. இதனால், மற்ற நாடுகளால் இந்த மருந்தினைப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய இயலாது. உலகளவில் உற்பத்தியாகும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தில், சுமார் 70% இந்தியாவில் தான் உற்பத்தி செய்ப்படுகின்றது.

இது மாத்திரை வடிவில் தான், தயாரிக்கப்படுகின்றது. இதனால், அனைத்து வயது நோயாளிகளாலும் எளிதாகப் பயன்படுத்த இயலும். ஒவ்வொரு ஆண்டும், சுமார் 40 டன் அளவிற்கு, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்திற்கான மூலக்கூறு பொருட்களானது, இந்தியாவில் கிடைக்கின்றன. இதனால், இந்தியாவில் பாதிக்கப்படுபவர்கள் பெருமளவில் தப்பித்து விடலாம்.

ஆனால், மற்ற நாடுகள் இந்தியாவினைச் சார்ந்தே உள்ளன. இதனால், அவர்கள் தற்பொழுது இந்தியாவிடம் உதவிக்கரம் வேண்டியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பகுதியில் தான் இந்த வைரஸ் பாதிப்பானது அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி, பிரேசில் நாட்டிலும் இந்த வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதற்கு மற்ற மருந்துகளை விட, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளையே, அந்நாட்டு மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் பரிந்துரைக்கின்றனர்.

சுமார் 200 மில்லிகிராம் அளவுள்ள மாத்திரையினை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 14 மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொண்டால், இந்த நோயானாது குணமாகும். இதனை தற்பொழுது 2 கோடி அளவில் தயாரிக்க இந்திய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்திய அரசாங்கமோ, தற்பொழுது 71 லட்ச மாத்திரைகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.

இதனால், இந்த மாத்திரையானது உலக நாடுகளின் பார்வையினைப் பெற்றுள்ளது. ஐபசிஏ ஆய்வகத்தின் தகவல்கள்படி, இந்திய அரசாங்கத்திற்காக 10 கோடி மாத்திரைகளை உற்பத்தி செய்ய உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. 15 மாத்திரைகளைக் கொண்ட ஒரு அட்டையானது, 97.44 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இதன் விலை உயர்வதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

பக்க விளைவுகள்

இந்த மாத்திரை மிகவும் குறைந்த பக்க விளைவுகளைக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. இந்த மாத்திரையினை மருத்துவரின் ஆலோசனைப் படியே பயன்படுத்த வேண்டும். கீழ்காணும் பிரச்சனை உள்ளவர்கள், கண்டிப்பாக கவனமாக பயன்படுத்த வேண்டும்.

அலர்ஜி உள்ளவர்கள், கண்ணில் உள்ள ரெட்டினாப் பகுதியில் பிரச்சனைகள் உள்ளவர்கள், கல்லீரல் அல்லது கிட்னி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள், தீராத வயிற்றில் வலி உள்ளவர்கள், இருதய நோய் உள்ளவர்கள், இரத்தம் அல்லது நரம்பு சம்பந்தப்பட்டப் பிரச்சனைகள் உள்ளவர்கள், சொரியாசிஸ் முதலிய நோய்களை உடையவர்கள், மரபியில் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள், போர்பைரியா நோய் உள்ளவர்கள் கவனமாக கையாள வேண்டும்.

குழந்தைகளுக்கு இந்த மாத்திரையில் இருந்து வெறும் 31 கிராம் அளவே வழங்கப்பட வேண்டும். இந்த மாத்திரையினால், அலர்ஜி ஏற்படலாம். குறிப்பாக, நாக்கு, உதடுகள், கண் இதழ்கள், முகத்தில் ஏற்படலாம்.

பரிசோதனைகள்

இந்த மருந்தினைப் பயன்படுத்துவதற்கு முன், கண்ணைப் பரிசோதிக்க வேண்டும். வயதில் மூத்த குடிமக்கள், இந்த மருந்தினை அதிகளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அது, கிட்னி சம்பந்தப்பட்டப் பிரச்சனைகள் ஏற்படுத்தும். இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவினைக் குறைத்துவிடும். எனவே, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவினை பரிசோதிப்பது அவசியமானது.

HOT NEWS