அமெரிக்காவிடம் எதையும் மறைக்கவில்லை! WHO அறிக்கை!

21 April 2020 அரசியல்
tedrosadhanomr.jpg

அமெரிக்காவில் தற்பொழுது கொரோனா வைரஸ் காரணமாக, 40,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது, உலகம் முழுக்கப் பரவி வருகின்றது. இதனால், கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் மரணமடைந்து உள்ளனர். இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இவைகளை எல்லாம் மிஞ்சும் வகையில், அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவினை சரியான நேரத்தில், உலக சுகாதார அமைப்பானது கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கைவில்லை எனவும், இதனால், அந்த அமைப்பின் மீது சந்தேகம் உள்ளது என அமெரிக்க அதிபர் தெரிவித்தார். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, தான் ஏற்கனவே, இந்த வைரஸானது மனிதர்களிடம் இருந்து மற்றொரு மனிதருக்குப் பரவக் கூடியது எனக் கூறியதாகவும், ஆனால் அதனை சுகாதரா மையம் மறுத்ததாகவும், தற்பொழுது அதுவே நடைபெற்று வருகின்றது எனவும் கவலைத் தெரிவித்தார்.

சீனாவிற்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகின்றது எனக் கூறிய அதிபர் ட்ரம்ப், உலக சுகாதார மையத்திற்கு வழங்கி வந்த உதவிகள் மற்றும் நிதியுதவியினை நிறுத்தினார். இதனால், அந்த அமைப்பு பலவித அறிவிப்புகளையும், டிரம்பின் சந்தேகத்தினை மறுத்தும் பேசி வருகின்றது. அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் பேசுகையில், அமெரிக்காவிடம் இருந்து எதையும் நாங்கள் மறைக்கவில்லை என்றுக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில், ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரை, அமெரிக்காவிடம் இருந்து எதையும் மறைக்கவில்லை. அவர்களுக்கு ஆரம்ப நாள் முதல், தேவையான அனைத்துத் தகவல்களையும் அளித்து வருகின்றோம். அமெரிக்க நிர்வாகிகளும், ஊழியர்களும் இந்த விவகாரத்தில், ஆரம்பித்தில் இருந்தே உலக சுகாதார மையத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS