மனைவிக்கு சரக்கு! சிகரெட்டால் சூடு! நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம்!

06 June 2020 அரசியல்
rape.jpg

தன்னுடைய மனைவிக்கு சாராயத்தினை ஊற்றிக் கொடுத்து போதையாக்கி, சிகரெட்டால் சுட்டு சித்தரவதை செய்து, பின்னர், தன்னுடைய நண்பர்களுக்கு இரையாக்கிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

கடவுளின் நாடு என்றுக் கூறிக் கொள்ளும் கேரளாவில் தான், இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது கடினங்குளம். இந்தப் பகுதியில் வசித்து வந்த கணவன் ஒருவர், தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் கடற்கரைக்கு அழைத்துச் செலவதாக வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அவர் கடற்கரைக்குச் செல்லவில்லை.

மாறாக, அவர் தன்னுடைய நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தன்னுடைய மனைவிக்கு கட்டாயப்படுத்தி மதுவினை ஊற்றிக் கொடுத்துள்ளார். அங்கு அவருடைய சிறிய வயது மகனும் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மது போதையில் இருந்து வந்த நண்பர்களும், அவருடன் இணைந்து பண்ணை வீட்டிற்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை கணவருடன் சேர்ந்து ஆறு பேர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த சிறிய வயது மகன் அவர்களுடன் சண்டையிட்டுள்ளான். ஆனால், அவனை அடித்து வெளியில் வீசிவிட்டனர். பின்னர், அந்தப் பெண்ணை சிகரெட்டால் சுட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து, அவர்கள் மது போதையில் மயங்கி உள்ளனர்.

இந்த சம்பவத்தினைப் பயன்படுத்தி, அவர்களிடம் இருந்து தப்பித்த அந்தப் பெண் சாலையில் அரைகுறை ஆடையுடன் வழியில் வந்தவர்களிடம் உதவிக் கேட்டுள்ளார். இந்தப் பெண் மற்றும் அவரின் மகனின் நிலமையைப் பார்த்தவர்கள், காவல்துறையிடம் உதவி கேட்டு சென்றுள்ளனர். விஷயத்தினைக் கேட்ட காவல்துறையினர், பத்துக்கும் மேற்பட்டப் பிரிவுகளில் மது போதையில் இருந்த ஆறு பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் மீது, தற்பொழுது போக்சோ சட்டமும் பாய்ந்துள்ளது. இந்த சம்பவம், தென் இந்திய அளவில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, அண்ணாச்சிப் பழத்தில் வெடி வைத்துக் கொடுத்து யானைக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த பலாத்கார சம்பவமும் கேரளாவின் சட்ட ஒழுங்கின் நிலைக் குறித்து கேள்வி எழுப்பும் விதமாக அமைந்துள்ளது.

HOT NEWS