கணவர் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது, மனைவியினைக் கற்பழித்த மர்ம நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், நேபாள நாட்டினைச் சேர்ந்த ஒருவர் காவலாளியாக வேலை செய்து வருகின்றார். அங்குள்ள ஒரு அறையில், அவரும் அவருடைய மனைவியும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கம் போல பணிக்குச் சென்றார் கணவர். வீட்டில் அந்தப் பெண் இருந்துள்ளார்.
இரவுப் பணியின் பொழுது, காவலாளியான கணவர் அயர்ந்து தூங்கிவிட்டார். இந்த நேரம் பார்த்து, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அவர், ஒவ்வொரு தளமாக சோதனை செய்துவிட்டு, அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்றுள்ளார். அப்பொழுது, அந்தப் பெண்ணினை கொன்றுவிடுவதாக மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார். இதனை, தன்னுடைய கணவரிடம் சொல்லி அழுதுள்ளார் அந்தப் பெண். இதனையடுத்து, போலீசில் அந்தக் காவலாளி புகார் அளித்துள்ளார். இவருடையப் புகாரினை ஏற்றுக் கொண்ட போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமிராவில் சோதனை செய்தனர்.
அதில், அந்த நபர் ஜட்டியுடன் முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு ஒவ்வொரு வீடாக நோட்டம் இடுவதைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும், ஒவ்வொரு தளமாகச் சென்றும் சோதனை செய்துள்ளதையும் போலீசார் கண்டறிந்து உள்ளனர். இந்த சம்பவம், தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.