வருகின்ற மே-7ம் தேதி முதல் தமிழகத்தில் ஒயின்ஷாப்பினை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் மே-6ம் தேதி முதல் ஊரடங்கு தளர்வுகள், அமலுக்கு வருகின்றன. இந்த சூழ்நிலையில், பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பது ஒயின்ஷாப் திறப்பது தான். இதனை மூடியிருப்பதனால், பெருமளவிலான பண வரவு தடைபட்டு உள்ளது.
இந்தியாவின் பெரும்பாலானா மாநிலங்களில், ஒயின்ஷாப்புகள் திறக்கப்பட்டு உள்ளன. இருப்பினும், டாஸ்மாக்கினைத் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், 40 நாட்களாக கஷ்டப்பட்டு வந்த குடிமகன்கள், வரிசையில் நின்று சரக்கு வாங்கிச் சென்றனர். ஒரு சிலர், ஆர்வமிகுதியில், தேங்காய் உடைத்தல், சூடம் காட்டுதல் உள்ளிட்டவைகளையும் செய்தனர்.
தமிழகத்தில் ஒயின்சாப்புகள் மூடப்பட்டு உள்ளதால், தமிழ்நாட்டு குடிமகன்கள், கர்நாடகாவின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள, ஒயின்ஷாப்புகளுக்குச் சென்று, சரக்கு வாங்கிச் சென்றனர். வருகின்ற, ஏழாம் தேதி தமிழகத்திலும் ஒயின்ஷாப்பிற்கு அனுமதி என தமிழக அரசு அறிவித்துள்ளதால், சமூக வலைதளங்களில் இதனைக் கொண்டாடி வருகின்றனர்.