டெல்லியில் இறந்து கிடந்த கணவரின் சடலத்துடன் இருந்து வந்த பெண்ணை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் தன்னுடைய உறவினர் வீட்டில் 59 வயது மதிக்கத்தக்க நபரும், 55 வயது மதிக்கத்தக்க பெண்ணும் வசித்து வந்தனர். அவர்களுக்கு 9 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், படுக்கையில், அந்த நபர் இறந்து கிடந்துள்ளார். இதுப் பற்றி எதுவும் கூறாமல், அப்பெண்ணும் அந்த அறையிலேயே இருந்துள்ளார். அந்த அறைக்கு வந்த குழந்தை, தந்தையின் வாயில் இருந்து ரத்தம் வந்துள்ளதைப் பார்த்து தன்னுடைய மாமாவிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்களும், போலீசாரும் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர், அந்தப் பெண்ணையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது பற்றி விசாரிக்கையில், அந்தப் பெண் மன நலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் எனவும், அல்லது கணவன் இறந்த்தை ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
இறந்து கிடந்த அந்த நபர், இயற்கை மரணம் அடைந்துள்ளார் என போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து, இறந்த நபரின் உறவினர்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டு இறுதி அஞ்சலி நடத்தப்பட்டது.