ஒரு பில்லியன் நிதியுதவி அளிக்கும் உலக வங்கி! இந்தியாவிற்கு உதவி!

16 May 2020 அரசியல்
worldbank.jpg

இந்தியாவிற்கு தற்பொழுது கூடுதலாக, ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக உலக வங்கி வழங்க உள்ளது.

உலக நாடுகள் பலவற்றிக்கும், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நிதியுதவியினை உலக வங்கியானது வழங்கி வருகின்றது. இதற்காக இந்தியாவிற்கு, ஏற்கனவே பண உதவியினை உலக வங்கி வழங்கி இருந்தது. இந்நிலையில் தற்பொழுது கூடுதலாக, ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க முன்வந்துள்ளது.

இந்த பணமானது, 2020ம் ஆண்டில் 750 மில்லியன் அளவிலும், 2021ம் நிதியாண்டில் 250 மில்லியன் என்றளவிலும் வழங்கப்பட உள்ளன. இந்திய மதிப்பில் சுமார், 7600 கோடி ரூபாயானது வழங்கப்பட உள்ளதால், கொரோனா வைரஸிற்கு எதிராக இந்தியா போராட இயலும் என உலக வங்கி கூறியுள்ளது.

HOT NEWS