உத்திரப்பிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் அவர்களின் தந்தை மரணமடைந்தார். அவருடைய இறுதி அஞ்சலிக்கு செல்லமாட்டேன் என, யோகி உருக்கமாகத் தெரிவித்து உள்ளார்.
நேற்று காலையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த யோகியின் தந்தை, உடல்நலம் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். இதனால், இன்று அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகின்றது. இது குறித்துப் பேசியுள்ள யோகி, தன்னுடைய தந்தையைக் காட்டிலும், 23 கோடி மக்கள் தொகை கொண்ட உத்திரப்பிரதேச மக்களின் பாதுகாப்பும், வாழ்க்கையுமே முக்கியம்.
அவருடைய உடலினை, நல்ல விதத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், தாய் மற்றும் மற்ற உறவினர்களிடம் பெரிய கூட்டம் எதையும் கூட்டாமல் செய்யவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.