மதுரையில் சிறார் ஆபாசப் படம் பதிவேற்றம் செய்தவர் கைது!

26 February 2020 அரசியல்
raviips.jpg

மதுரையில் சிறார் ஆபாசப் படத்தினை, இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக குமார் என்ற இளைஞரைப் போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஆண்டின் இறுதியில், சிறார் ஆபாசப் படங்களை இணையத்தில் பார்த்தாலோ, பதிவேற்றம் செய்தாலோ, ஷேர் செய்தாலோ போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றப்பிரிவு ஏடிஜிபியான ரவி ஐபிஎஸ் தெரிவித்தார்.

இது பெரும் அளவில், பரபரப்பினை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அவர் கூறியது போல, திருச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் பலர் இந்த செயல்களினை செய்ததால், போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இவர்கள் மீது போக்சோ சட்டமும் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது மதுரை மாவட்டத்தினைச் சேர்ந்த, குமார் என்ற இளைஞர், இணையத்தில் குழந்தைகள் ஆபாசப் படத்தினை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

HOT NEWS