சபரி மலைக்கு மாலை அணிந்து கொண்டு, 48 நாட்கள் விரதம் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்குச் செல்கின்றனர். தற்பொழுது, சீஷன் என்பதால், பலரும் இந்த விரதத்தினை இருந்து வருகின்றனர். தென் இந்தியாவின் பிரசித்திப் பெற்றத் திருத்தலங்களில், சபரிமலை சாஸ்தா கோவிலும் ஒன்று.
அந்த கோவிலுக்கு, நேற்று நீலிமலை வழியாக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாதீஸ்வரன் என்ற வாலிபர், மாரடைப்பால் காலமானார். அவர், மலைப்பாதையில் செல்லும் பொழுது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் அங்குள்ள சன்னிதான மருத்துவமனையில் அவசர அவசரமாக சேர்க்கப்பட்டார். இருப்பினும், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.