டிக்டாக் பெண்ணிற்காக, நண்பனைப் போட்டுத் தள்ளிய இளைஞன்!

18 March 2020 அரசியல்
tiktok.jpg

இந்த டிக்டாக் ஆப் வந்த பின் தான், சமூகத்தில் நிலவி வந்த அமைதிக் குலைந்துள்ளது என்றால், அது மிகையில்லை. அந்த அளவிற்கு, இந்த ஆஃப் மூலம், பலப் பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளது. இந்த ஆஃப்பினை பயன்படுத்தி, பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது, பணம் பறிப்பது, விபச்சாரம் முதலான செயல்கள் படு ஜோராக நடைபெற்று வருகின்றன.

கடலூரில் இந்த டிக்டாக் பழக்கத்திற்காக, நண்பனைக் கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியினைச் சேர்ந்தவர் ஜெய்வின் ஜோசப். 18 வயதுடைய அவர், டிக்டாக்கில் தன்னுடைய வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார். அவர் டிக்டாக்கில் வீடியோ பதிவிடும், அந்தப் பகுதிப் பெண்ணுடன் பேசிப் பழகி வந்துள்ளார்.

அதனால், அவருக்கும் அவருடைய நண்பர்களுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. ஒரு நாள் இதற்காக அவரும், அவருடைய நண்பர்களும் அடித்துக் கொண்டுள்ளனர். இதனையும், ஜெய்வின் ஜோசப் வீடியோவாகப் பதிவு செய்து, டிக்டாக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவருடைய நண்பர்கள் அவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளனர்.

இதனால், கடந்த 4ம் தேதி அன்று, உப்பணாறு என்றப் பகுதிக்கு ஜெய்வின் ஜோசப்பினை அவருடைய நண்பர்களான விஜய் மற்றும் பிரபாகரன் ஆகியோர் வரவழைத்து உள்ளனர். அங்கு, அவரைக் கொன்று ஆற்றில் புதைத்துள்ளனர். பின்னர், அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளனர்.

வீட்டிற்கு மகன் திரும்பாததால் பதற்றம் அடைந்த ஜெய்வின் ஜோசப்பின் தாய், மகனைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அதில், அவருடைய நண்பர்கள் மீது சந்தேகம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து, ஜெய்வின் ஜோசப்பின் மொபைலை எடுத்து சோதித்தனர். அவர் கடைசியாக, பிரபாகரன் மற்றும் விஜயிடம் பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, போலீசார் அவர்கள் பாணியில் விசாரிக்க ஆரம்பித்தனர். அந்த விசாரணையில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். பின்னர், புதைக்கப்பட்ட உடலினைத் தோண்டி எடுத்து, அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர். அதில், அவர் கழுத்து வெட்டுப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளது உறுதியானது. இதற்காக, அந்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS